×

நெல்லை வாக்குச்சாவடிகளில் `நோட்டாவை’ மறந்த வாக்காளர்கள்

நெல்லை: நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடந்தது. வழக்கமாக இந்த இயந்திரத்தில் `யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’  என விருப்பம் தெரிவித்தவர்கள் பயன்படுத்தும் வகையில் நோட்டா என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த நோட்டா முறை, இயந்திரத்தில் செயல்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக நோட்டா முறை பயன்படுத்தும் வாக்காளர்களுக்கு படிவம் 21 பி வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து வழங்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் வாக்காளர்கள், நோட்டா முறையை மறந்தும், படிவம் 21ஐ பூர்த்தி செய்து வழங்காமலும் தங்களது விருப்பம் மற்றும் சுயேட்சைகளுக்கு வாக்களித்து சென்றனர்.

Tags : `NOTA ,Nellie , Voters forget 'nota' at polls tomorrow
× RELATED நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால்...